-
இயேசுகிறிஸ்துவினுடைய
ஊழியக்காரனும், யாக்கோபினுடைய சகோதரனுமாயிருக்கிற யூதா, பிதாவாகிய
தேவனாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களும், இயேசுகிறிஸ்துவினாலே
அழைக்கப்பட்டவர்களுக்கு எழுதுகிறதாவது:
-
உங்களுக்கு இரக்கமும்
சமாதானமும் அன்பும் பெருகக்கடவது.
-
பிரியமானவர்களே, பொதுவான
இரட்சிப்பைக்குறித்து உங்களுக்கு எழுதும்படி நான் மிகவும்
கருத்துள்ளவனாயிருக்கையில், பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை
ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக போராடவேண்டுமென்று உங்களுக்கு
எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாய்க் கண்டது.
-
ஏனெனில் நமது தேவனுடைய
கிருபையைக் காமவிகாரத்துக்கேதுவாகப் புரட்டி, ஒன்றான ஆண்டவராகிய
தேவனையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும் மறுதலிக்கிற
பக்தியற்ற சிலர் பக்கவழியாய் நுழைந்திருக்கிறார்கள்; அவர்கள் இந்த
ஆக்கினைக்குள்ளாவார்களென்று பூர்வத்திலே எழுதியிருக்கிறது.
-
நீங்கள் முன்னமே
அறிந்திருந்தாலும், நான் உங்களுக்கு நினைப்பூட்ட விரும்புகிறதென்னவெனில்,
கர்த்தர் தமது ஜனத்தை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணி இரட்சித்து,
பின்பு விசுவாசியாதவர்களை அழித்தார்.
-
தங்களுடைய ஆதிமேன்மையைக்
காத்துக்கொள்ளாமல், தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட
தூதர்களையும், மகா நாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய
சங்கிலிகளினாலே கட்டி, அந்தகாரத்தில் அடைத்து வைத்திருக்கிறார்.
-
அப்படியே சோதோம்
கொமோரா பட்டணத்தார்களும், அவைகளைச் சூழ்ந்த பட்டணத்தார்களும்,
அவர்களைப் போல் விபசாரம்பண்ணி, அந்நிய மாம்சத்தைத் தொடர்ந்து, நித்திய
அக்கினியின் ஆக்கினையை அடைந்து, திருஷ்டாந்தமாக
வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
-
அப்படிப்போலவே,
சொப்பனக்காரராகிய இவர்களும் மாம்சத்தை அசுசிப்படுத்திக்கொண்டு,
கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணி, மகத்துவங்களைத் தூஷிக்கிறார்கள்.
-
பிரதான தூதனாகிய மிகாவேல்,
மோசேயின் சரீரத்தைக் குறித்துப் பிசாசுடனே தர்க்கித்துப்பேசினபோது,
அவனைத் தூஷணமாய்க் குற்றப்படுத்தத் துணியாமல்: கர்த்தர் உன்னைக் கடிந்து
கொள்ளுவாராக என்று சொன்னான்.
-
இவர்கள் தங்களுக்குத்
தெரியாதவைகளைத் தூஷிக்கிறார்கள்; புத்தியில்லாத மிருகங்களைப்போல
சுபாவப்படி தங்களுக்குத் தெரிந்திருக்கிறவைகளாலே தங்களைக்
கெடுத்துக்கொள்ளுகிறார்கள்.
-
இவர்களுக்கு ஐயோ! இவர்கள்
காயீனுடைய வழியில் நடந்து, பிலேயாம் கூலிக்காகச் செய்த வஞ்சகத்திலே
விரைந்தோடி, கோரா எதிர்த்துப்பேசின பாவத்திற்குள்ளாகி,
கெட்டுப்போனார்கள்.
-
இவர்கள் உங்கள் அன்பின்
விருந்துகளில் கறைகளாயிருந்து, பயமின்றிக் கூட விருந்துண்டு, தங்களைத்
தாங்களே மேய்த்துக்கொள்ளுகிறார்கள்; இவர்கள் காற்றுகளால்
அடியுண்டோடுகிற தண்ணீரற்ற மேகங்களும், இலையுதிர்ந்து கனியற்று
இரண்டுதரஞ் செத்து வேரற்றுப் போன மரங்களும்,
-
தங்கள் அவமானங்களை
நுரைதள்ளுகிற அமளியான கடலலைகளும், மார்க்கந்த்தப்பி அலைகிற
நட்சத்திரங்களுமாயிருக்கிறார்கள்; இவர்களுக்காக என்றென்றைக்கும் காரிருளே
வைக்கப்பட்டிருக்கிறது.
-
ஆதாமுக்கு ஏழாந்தலைமுறையான
ஏனோக்கும் இவர்களைக்குறித்து: இதோ, எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக்
கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் யாவரும் அவபக்தியாய்ச்
செய்துவந்த சகல அவபக்தியான கிரியைகளினிமித்தமும்,