Tamil Christian Songs

Download MP3 Song, News, Music, Audio and Video

Thursday
Sep 09th
Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
 மார்ஸ் மேடை
Welcome Guest   [Register]  [Login]
 Subject :Re:நாளொரு நல்ல சிந்தனை .. 06-08-2010 20:13:32 
vashni
Junior Member
Joined: 05-07-2010 10:26:18
Posts: 30
Location: Srilanka
 
//மனச்சாட்சிக்காகவும் சமாதானத்துக்காகவும் கிறிஸ்துவுக்காகவும் பணத்தை இழக்கவும் ஆயத்தமாயிருங்கள். ஆண்டவருக்கென்று இழப்பவை உண்மையான இழப்பல்ல என்று திட்டமாய் நம்புங்கள். // true .....

@ timothy_tni அவர்களுக்கு நன்றி....! இத்தளத்தினுள் நீங்கள் இப்படி வாழ்துவீர்கள் என்று நான் கனவிலும் எண்ணியதில்லை... சரி,

''எனக்கு ஜீவன், சுகம், பெலன், ஆரோக்கியம் என அனைத்து வசதிகளையும் கொடுத்து என்னை வாழ வைத்துள்ள என் இயேசு ராஜாவுக்கு மகிமையையும் கனத்தையும் செலுத்துகின்றேன்" நன்றி..My Jesus...!!!

இ.வஷ்னீ.
IP Logged
Last Edited On: 06-08-2010 20:13:32 By vashni for the Reason
http://www.facebook.com/home.php?#!/vashni.inpanathannull
 Subject :Re:நாளொரு நல்ல சிந்தனை .. 02-08-2010 14:37:09 
timothy_tni
Junior Member
Joined: 20-11-2009 10:32:44
Posts: 31
Location: Theni
இன்று பிறந்த நாள் காணும் Vashni சகோதரர் அவர்களுக்கு இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுவரை நடத்திவந்த எபினேசர் தாமே இனியும் மகிமையாய் சகோதரரை நடத்துவாராக..

பிரியமான சகோதரரின் ஆத்துமா வாழ்கிறதுபோல, எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்.


<3 <3 <3
IP Logged
 Subject :read தினமும் ஒரு நற்செய்தி in fa.. 01-08-2010 20:24:10 
vashni
Junior Member
Joined: 05-07-2010 10:26:18
Posts: 30
Location: Srilanka
 
Subject :read தினமும் ஒரு நற்செய்தி in facebook

The LORD is my shepherd; I shall not want. He maketh me to lie down in green pastures: he leadeth me beside the still waters. He restoreth my soul: he leadeth me in the paths of righteousness for his name's sake. for thou art with me; thy rod and thy staff they comfort me. Surely goodness and mercy shall follow me all the days of my life: and I will dwell in the house of the LORD for ever.

http://en-gb.facebook.com/pages/tinamum-oru-narceyti/121392177881705தினமும் ஒரு நற்செய்தி
IP Logged
http://www.facebook.com/home.php?#!/vashni.inpanathannull
 Subject :Re:நாளொரு நல்ல சிந்தனை .. 01-08-2010 04:26:21 
chillsam
Elite Member
Joined: 30-11-1999 05:30:00
Posts: 518
Location: chennai
 
ஆஹா...அற்புதம்...அற்புதம்...!

அற்புதம்..?
அற்புதம்..அற்புதம்..அற்புதம்..!
IP Logged
"Praying for your Success"
 Subject :Re:நாளொரு நல்ல சிந்தனை .. 30-07-2010 16:47:18 
Jesus_My_Love
Full Member
Joined: 30-11-1999 05:30:00
Posts: 167
Location: Heart Of My Love
அருமை!
அருமை!
IP Logged
Following Jesus
 Subject :நாளொரு நல்ல சிந்தனை .. 03-08-2010 18:25:07 
arputham
Elite Member
Joined: 30-11-1999 05:30:00
Posts: 632
Location: bangalore
பிரசங்க வேந்தன் என்றழைக்கப்படும் ஸ்பர்ஜன் அவர்களின் விசுவாச தின தியான நூலை வாசித்துக் கொண்டிருந்தேன். அதில் நான் வாசித்த பகுதி எனக்கு மிகவும் பிரயோஜனமாக இருந்தது. உங்களுக்கும் அப்படியே இருக்கும்படிக்கு அதை இங்கு தருகிறேன்.



அப்பொழுது அமத்சியா அப்படியானால் நான் இஸ்ரவேலின் சேனைக்குக் கொடுத்த நூறு தாலந்திற்காகச் செய்யவேண்டியது என்ன என்று தேவனுடைய மனுஷனைக் கேட்டான். அதற்குத் தேவனுடைய மனுஷன் அதைப்பார்க்கிலும் அதிகமாய்க் கர்த்தர் உமக்குக் கொடுக்கக்கூடும் என்றான் (2.நாளா.25:9).


நீங்கள் தவறு செய்து விட்டால் அதனால் வரும் நஷ்டத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். ஆண்டவருடைய சித்தத்துக்கு மாறாகமட்டும் எதுவும் செய்யாதிருங்கள். நீங்கள் நஷ்டத்தினால் இழப்பதைவிட அதிகமாக ஆண்டவர் கொடுக்கக் கூடியவர். அவர் அப்படிக் கொடுக்காவிட்டால் நீங்கள் அவரோடு பேரம் பேசத்தொடங்குவீர்களா? யூதாவின் அரசன் விக்கிரகங்களை வணங்கின இஸ்ரவேலின் சேனையைக் கூலிக்கு அமர்த்தியிருந்தான். அவர்களோடு கடவுள் இல்லாதபடியால் தீர்க்கர் அவர்களை அனுப்பிவிடச் சொன்னார். அவன் அவர்களை அனுப்பிவிட சம்மதித்தான். ஆனால் போர் செய்யாமலேயே அவர்களுக்கு நூறு தாலந்துகள் கொடுக்கத் தயங்கினான். இது எவ்வளவு இழிவானது என்று நினைத்துப் பாருங்கள். அவர்கள் போர் செய்யாமலேயே ஆண்டவர் வெற்றியைக் கொடுப்பதென்றால் அவர்களுக்குப் பேசின கூலியைக் கொடுத்து அனுப்பி விடுவது நல்லதல்லவா?

மனச்சாட்சிக்காகவும் சமாதானத்துக்காகவும் கிறிஸ்துவுக்காகவும் பணத்தை இழக்கவும் ஆயத்தமாயிருங்கள். ஆண்டவருக்கென்று இழப்பவை உண்மையான இழப்பல்ல என்று திட்டமாய் நம்புங்கள். இந்த வாழ்க்கையிலேயே நஷ்டத்துக்கு அதிகமாகவே ஈடு செய்யப்பட்டு விடுகிறது. சில சந்தர்ப்பங்களில் ஆண்டவர் நஷ்டம் ஏற்படுவதையே தடுத்து விடுகிறார். இயேசுவுக்கென்று நாம் இழப்பவை பரலோகத்தில் நித்தியவாழ்விலே ஈடு செய்யப்பட்டு விடுகின்றன. பேராபத்தைப்போல் தோன்றுவதைக் குறித்துப் பதட்டங் கொள்ளாதேயுங்கள். அதைப்பார்க்கிலும் அதிகமாய்க் கர்த்தர் உமக்குக் கொடுக்கக்கூடும் என்னும் மெல்லிய சத்தத்துக்குச் செவி கொடுங்கள்.
IP Logged
Last Edited On: 03-08-2010 18:25:07 By tamilchr for the Reason
Page # 


Powered by ccBoard